Showing posts with label செய்யுள். Show all posts
Showing posts with label செய்யுள். Show all posts

Friday, 5 June 2015

அரியது! பெரியது! இனியது! கொடியது!

 அரியது! பெரியது! இனியது! கொடியது!



Murugan 18


அரியது 


அரியது கேட்கின் வரிவடி 
வேலோய்
அரிதரிது மானிடர் ஆதல் அரிது 
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடுபேடு நீங்கிப் பிறத்தல் அரிது 
பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்தானமும் தவமும் தான்செயல் அரிது
தானமும் தவமும் தான்செய்வ ராயின்
வானவர் நாடு வழிதிறந் திடுமே. 


பெரியது 


பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது புவனமோ நான்முகன் படைப்பு நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்கரிய மாலோ அலைகடல் துயின்றோன்அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்கலசமோ புவியிற் சிறுமண் புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே. 






இனியது


இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்அதனினும் இனிது அறிவினர்ச் சேர்தல்அதனினும் இனிது அறிவுள் ளாரைக்கனவிலும் நனவிலும் காண்பது தானே. 


கொடியது 


கொடியது கேட்கின் நெடியவெல் வேலோய்!
கொடிது கொடிது வறுமை கொடிதுஅதனினும் கொடிது இளமையில் வறுமைஅதனினும் கொடிது ஆற்றொணாத் தொழுநோய்அதனினும் கொடிது அன்பிலாப் பெண்டிர்அதனினும் கொடிது இன்புற அவர்கையில் உண்பது தானே. 



♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪